திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக ரச்சிதா மஹாலெட்சுமி கலந்து கொண்டுள்ளார். சீரியல்களின் மூலம் பிரபலமான ரச்சிதாவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் அவர் மீதான எதிர்பார்ப்பும் அவருக்கு கிடைக்கும் ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரச்சிதா, தனது வாழ்க்கை பற்றி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் குழந்தையை தத்தெடுப்பது பற்றி விக்ரமனிடம் பேசும் ரச்சிதா, 'நான் 35 வயசுல ஒரு குழந்தையை தத்தெடுப்பேன். ஏன் அப்படி 35 வயச ஒரு அளவுகோல வச்சிருக்கேன்னா, அப்ப நான் இன்னும் நிறைய கத்துக்கிட்ட அனுபவம் கிடைக்கும். அதுமூலமா ஒரு குழந்தைய வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்' என்று கூறுகிறார். ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று விக்ரமன் கேட்க ரச்சிதா, 'பெண் குழந்தை தான்' என்று கூறுகிறார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் திருமண வாழ்வில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் ரச்சிதா பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் ரச்சிதாவின் கணவர் தினேஷ், ரச்சிதாவுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்து வருகிறார். ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்னரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசுவதை பார்த்தால், அவர் தினேஷூடன் சேர்ந்து வாழ்வாரா? இல்லையா என ரசிகர்களே சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.