காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி |

2018ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான 'பிலி ஹெந்தி' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தேஜஸ்வினி கவுடா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'கல்யாணம் முதல் காதல் வரை',  'ஈரமான ரோஜாவே 2' தொடர்களில் நடித்தார். தற்போது, 'வித்யா நம்பர் 1 ' தொடரில் நடித்து வருகிறார்.
தேஜஸ்வினி கன்னட தொலைக்காட்சி நடிகர் அமர்தீப் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது நிச்சயிக்கப்பட்டபடி இருவரது திருமணமும் டிச., 14 அன்று நடந்தது. புதுமண தம்பதிகளுக்கு சின்னத்திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            