தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் முகம் பதித்தவர் ராமர். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய நபராக கலந்து கொண்டு வருகிறார். என்னதான் தொலைக்காட்சி பிரபலம் என்ற போதிலும், ராமர் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரி என்றும் பெயரெடுத்துள்ளார். ராமர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சக விஜய் டிவி தோழர்களான டைகர்கார்டன் தங்கதுரை, ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் மற்றும் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களை அவர்கள் தங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து ராமரின் இந்த வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.