'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

ஆர்ஜே வைஷ்ணவி சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமானார். அஞ்சான் என்பவரை காதலித்து வந்த வைஷ்ணவி, கடந்த 2019ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், வைஷ்ணவி அஞ்சானை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆறு வருடமாக அஞ்சானுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, நாங்கள் இருவரும் இப்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன் ஆனாலும், உறவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் எங்களை நாங்களே இழக்காமல் இருக்க வேண்டுமென தீர ஆலோசனை செய்துவிட்டு அதன்பின்னர் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களுக்குள் பல பொதுவான மற்றும் பகிர்ந்துகொண்ட விருப்பங்கள் அனைத்தும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக இருப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டோம். எங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் இல்லை. தேவையில்லாமல் எதையும் யூகித்து பரப்ப வேண்டாம்.' என அதில் தெரிவித்துள்ளார்.