டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ஆல்யா மானசா. அதன்பின் பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது ரியா விஸ்வநாத் என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆல்யா விலகிய பின் சீரியல் ட்ராப் ஆகிவிடும் என பலரும் கருதி வந்த நிலையில், ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக 500வது எபிசோடை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை ஆல்யா மானசாவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ராஜா ராணி சீசன் 2வின் இயக்குநர் பிரவீன் பேசும்போது, 'ஷூட்டுக்கு ஆன் டைம் வருவதில் ஆல்யா தான் முதல் ஆள். குதிக்கிற மாதிரியான ஷாட் என்று சொன்னால் போதும், உடனே மாடியிலிருந்து கூட குதிக்க தயராகிவிடுவார். சின்சியாரிட்டியின் மறு உருவமே ஆல்யா தான்' என்பது போல் அவரை புகழ்ந்தார்.
இதன்காரணமாகவும், குழந்தை பிறந்த பின் ஆல்யா கலந்து கொள்ளும் முதல் டிவி நிகழ்ச்சி இதுதான் என்பதாலும் ரசிகர்கள் பலரும் வெற்றிவிழா நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியானது வரும் சுதந்திர தினத்தன்று மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.