அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ஆல்யா மானசா. அதன்பின் பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது ரியா விஸ்வநாத் என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆல்யா விலகிய பின் சீரியல் ட்ராப் ஆகிவிடும் என பலரும் கருதி வந்த நிலையில், ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக 500வது எபிசோடை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை ஆல்யா மானசாவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், ராஜா ராணி சீசன் 2வின் இயக்குநர் பிரவீன் பேசும்போது, 'ஷூட்டுக்கு ஆன் டைம் வருவதில் ஆல்யா தான் முதல் ஆள். குதிக்கிற மாதிரியான ஷாட் என்று சொன்னால் போதும், உடனே மாடியிலிருந்து கூட குதிக்க தயராகிவிடுவார். சின்சியாரிட்டியின் மறு உருவமே ஆல்யா தான்' என்பது போல் அவரை புகழ்ந்தார்.
இதன்காரணமாகவும், குழந்தை பிறந்த பின் ஆல்யா கலந்து கொள்ளும் முதல் டிவி நிகழ்ச்சி இதுதான் என்பதாலும் ரசிகர்கள் பலரும் வெற்றிவிழா நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியானது வரும் சுதந்திர தினத்தன்று மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.