தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை வனிதா விஜயக்குமார் தனது கேரியரின் இரண்டாவது இன்னிங்சை அருமையாக ஆடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல மெச்யூர்டாக மாறியுள்ள வனிதா சினிமா, தொழில் என பிசியாக வலம் வருகிறார். இதுநாள் வரையில் அவ்வப்போது சீரியலில் கெஸ்ட் ரோலுக்கு மட்டும் தலைக்காட்டி வந்த வனிதா தற்போது புது சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் 'மாரி' என்கிற புதிய தொடரில் 'சகுந்தலா' என்ற கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். அவரது என்ட்ரியே செம மாஸாக உள்ளது. சீரியல்களில் மற்ற நடிகைகள் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து பேமஸ் ஆகி வருகின்றனர். வனிதாவிற்கு வில்லத்தனம் செய்வதெல்லாம் சாதரணமான விஷயம். எனவே, மாரி தொடரில் அவரது கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் ரீச்சாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.