அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகை வனிதா விஜயக்குமார் தனது கேரியரின் இரண்டாவது இன்னிங்சை அருமையாக ஆடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல மெச்யூர்டாக மாறியுள்ள வனிதா சினிமா, தொழில் என பிசியாக வலம் வருகிறார். இதுநாள் வரையில் அவ்வப்போது சீரியலில் கெஸ்ட் ரோலுக்கு மட்டும் தலைக்காட்டி வந்த வனிதா தற்போது புது சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் 'மாரி' என்கிற புதிய தொடரில் 'சகுந்தலா' என்ற கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். அவரது என்ட்ரியே செம மாஸாக உள்ளது. சீரியல்களில் மற்ற நடிகைகள் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து பேமஸ் ஆகி வருகின்றனர். வனிதாவிற்கு வில்லத்தனம் செய்வதெல்லாம் சாதரணமான விஷயம். எனவே, மாரி தொடரில் அவரது கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் ரீச்சாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.