பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு |
கோடைகால விடுமுறையை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஜீ தமிழ் சேனல் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி வந்தது. இந்த வரிசையில் நாளை( 26ம் தேதி) மாலை 5 மணிக்கு ராதே ஷ்யாம் படத்தை ஒளிபரப்புகிறது.
பாகுபலி 2, சாஹோ படங்களை தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் இது. இதில் பிரபாசுடன், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜெகபதி பாபு, கிருஷ்ணம் ராஜூ, பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இண்டியா படமாக உருவாகி இருந்தது.
தெலுங்கு, இந்தியில் தயாராகி இருந்த படம், தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் கடந்த மார்ச் 11ம் தேதி வெளிவந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்போது டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதைத்தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு கோலிவுட் மேன்ஷனின் வேடிக்கையான எபிசோடுடன் பார்வையாளர்களை விருந்தளிக்கும் விதமாக யானை படத்தில் நடித்த அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் ராமச்சந்திர ராஜூ ஆகியோர் படம் பற்றிய பகிர்ந்து கொள்ளும் நிகழ்வும் கலகலப்பாக நடக்கிறது.