இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

'சித்தி 2' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் ப்ரீத்தி சர்மா. லக்னோவை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் படிப்பை 10-ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா, டிக் டாக், ரிலீஸ் வீடியோக்கள் மூலம் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். சித்தி 2 சீரியல் திடீரென முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் வேறெந்த ப்ராஜெக்டிலும் ப்ரீத்தி நடிக்கவில்லை. தெலுங்கில் ஒளிபரப்பாகும் காவ்யாஞ்சலி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை தமிழ் ரசிகர்கள் ஆசையோடு பார்த்து காதலித்து வருகின்றனர். சீக்கிரம் தமிழில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.




