காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

'சித்தி 2' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் ப்ரீத்தி சர்மா. லக்னோவை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் படிப்பை 10-ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா, டிக் டாக், ரிலீஸ் வீடியோக்கள் மூலம் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். சித்தி 2 சீரியல் திடீரென முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் வேறெந்த ப்ராஜெக்டிலும் ப்ரீத்தி நடிக்கவில்லை. தெலுங்கில் ஒளிபரப்பாகும் காவ்யாஞ்சலி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை தமிழ் ரசிகர்கள் ஆசையோடு பார்த்து காதலித்து வருகின்றனர். சீக்கிரம் தமிழில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.




