வாயெல்லாம் அடைத்துவிட்டது : பிறந்தநாள் வாழ்த்தில் நெகிழ்ந்த இளையராஜா | கொலை மிரட்டல் காரணமாக மேனேஜர் மீது போலீசில் புகார் அளித்த உன்னி முகுந்தன் | மகள் பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்றை நீக்கிய ஜோதிகா : சிங்கம் 4 காரணமா? | என்றென்றும் உங்கள் நண்பன் : மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து | திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு | நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது |
விஜய் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தொடர் சிப்பிக்குள் முத்து. இந்த தொடரின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல மாடல் அழகி லாவண்யா அறிமுகமாகிறார். இவர் மாடலாக இருந்த போது, சர்ச்சை நாயகியாக வலம் வரும் மீரா மிதுனால் ஏமாற்றப்பட்டார் என்ற தகவல் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பெண்களை மீரா மிதுன் பல மாடல் ஷோக்களில் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றியதாக பலரும் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் மிஸ் சவுத் இந்தியா நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக மீரா மிதுன் சிலரை ஏமாற்றியிருந்தார். அதில் ஒரு மாடல் அழகி தான் லாவண்யா. அவர் தற்போது சீரியலில் கமிட்டாகியிருப்பதால் அவரை பற்றி தகவல்களை துளாவிய நெட்டீசன்கள் இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
லாவண்யா அந்த ஒரு முறை ஏமாந்திருந்தாலும், தனது திறமையால் குயின் ஆஃப் மெட்ராஸ் 2019 மற்றும் மிஸ் தமிழ்நாடு 2020 ரன்னர், மிஸ் போட்டோஜெனிக் - மிஸ் சவுத் இந்தியா ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இதன்மூலம் ஜீ தமிழின் சூப்பர் குயின் நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரையில் நுழைந்த லாவண்யா தற்போது விஜய் டிவியில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார். இப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் சேர்ந்து வரும் நிலையில், மிக விரைவில் முன்னணி நடிகையாகவும் ஜொலிப்பார் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.