‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் தொடர்களில் ஒன்று வள்ளி திருமணம். இதில் நக்ஷத்திரா, ஷ்யாம், நளினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த தொடர், தற்போது சற்று சொதப்பி வருகிறது. எனவே, வழக்கம் போல் ஹிட் சீரியல் நடிகை ஒருவரை சிறப்பு வரவாக அழைத்து வந்து சுவாரசியத்தை கூட்ட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் வள்ளி திருமணம் தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்டேகர் நுழைகிறார்.
நாயகன் கார்த்தியின் தோழியாக அறிமுகமாகியுள்ள ஸ்வேதா பண்டேகர், 'பூமிகா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வள்ளிக்கு வில்லியாக அவர் இனி இந்த சீரியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்வேதா பண்டேகர் 'சந்திரலேகா' தொடரின் நாயகியாக நடித்து புகழின் உச்சத்தில் உள்ளார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலின் ஆரம்பம் முதல் தற்போது வரை ஸ்வேதா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.