மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல மவுசு அதிகரித்துள்ளது. புதிய கான்செப்ட்டுகளில் புதுப்புது நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற புதிய நிகழ்ச்சி வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தான் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தனது அம்மாக்களுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், செந்தில் தனது அம்மாவுடன் கலந்து கொள்கிறார். மேலும் அம்மாவை நினைத்து செண்டிமெண்ட்டான பாடலையும் பாடியுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த புரோமோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தாயில்லாமல் நானில்லை வருகிற ஞாயிறு முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.