ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
பிரியமானவள் தொடரின் மூலம் பிரபலமானவர் அபி நவ்யா. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், சின்னத்திரையில் நடிப்பதற்காக பட்ட கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், 'சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய காலங்களில் 250க்கு மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். பெரும்பாலான இடங்களில் ஓப்பனாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கேட்டனர். சினிமாவில் மட்டுமல்ல சீரியலில் நடிப்பதும் கஷ்டமான விஷயம் தான். அதிலும் பெண்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சினிமாவில் இன்னும் மீ டூ புகார் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால், பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார்.