25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் தாமரைச்செல்வி தான் ஒரே ஆறுதலாக இருந்தார். ஆனால், அவரும் சமீபத்திய எவிக்ஷனில் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை தாமரைச் செல்வி யார்? என்ன செய்கிறார்? என்று எதுவுமே தெரியாது. இருப்பினும் அவருக்கு சப்போர்ட்டர்ஸ் அதிகம். தற்போது வெளியாகியுள்ள தாமரைச் செல்வியின் வீடு பற்றிய தகவல்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர் தாமரை. தற்போது அவரது குடும்பம் அண்ணன் பெரமையா சம்பாத்தியத்தில் ஓடி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தாங்காத வீடு, வீட்டில் ஆறு பேருக்கு மேல் தங்க வசதி கிடையாது. வீட்டிற்கு அருகே மாட்டுக்கொட்டடியின் அருகில் தான் சமையல் கட்டு. வீட்டில் டிவி கூட கிடையாது. தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிறகு தான் டிவியை சரி செய்துள்ளனர். அதில் தாமரைச் செல்வி சிரிப்பதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவரது தங்கை விஜயலெட்சுமி கூறுகையில், 'நான் பிறந்ததில் இருந்து அக்கா முகத்துல சந்தோஷத்த பார்த்ததே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அக்கா சிரித்ததை பார்த்தேன்' என கூறியுள்ளார்.
அடிப்படை தேவையான பாத்ரூம் வசதி கூட இல்லாத வீட்டில் தான் தாமரைச் செல்வி பிறந்துள்ளார். இன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ள அவர், தனது வீட்டை எப்படியும் முன்னேற்றிவிட முடியும் என நம்பிக்கையுடன் உழைத்து வருகிறார். தாமரைச் செல்வியின் தங்கை விஜயலெட்சுமிக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசையாம். குடும்ப வருமை காரணமாக துணிக்கடைக்கு வேலைக்கு செல்ல நினைத்தவரை அண்ணன் பெரமையா படிக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். அக்கா தாமரை செல்வியும் தனது தங்கை கலெக்டர் ஆக வேண்டும் என போராடி வருகிறார்.