தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள விலாசினி, ஆர்ஜே, டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பன்முக திறமை கொண்டவர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர் தான் இந்த விலாசினி. இசைகுடும்பத்தில் பிறந்ததால் இவரும் பாடகியாக வர வேண்டும் என்றே முதலில் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிரியாணி படத்தில் மட்டும் சில வரிகள் பாடியிருந்தார். தொடந்து பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆர்ஜேவாக சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு ஆதித்யா டிவியில் சில காலங்கள் வீஜேவாக இருந்த அவர், அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், நிறத்தின் காரணமாக சினிமாவிலும் நிராகரிக்கப்பட்ட விலாசினிக்கு விஜய் டிவி தான் கடைசியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு அளித்தது. விலாசினி தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
கேரியர் என்பதை தாண்டி, சொந்த வாழ்க்கையிலும் கணவரின் கொடுமையால் துன்பத்திற்கு ஆளான விலாசினி, அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது நடிப்பிலும் ரசிகர்களை மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் தங்கள் அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கும் விலாசினி புதிய போட்டோஷூட்டுகள் மூலம் சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறார்.




