சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள விலாசினி, ஆர்ஜே, டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பன்முக திறமை கொண்டவர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர் தான் இந்த விலாசினி. இசைகுடும்பத்தில் பிறந்ததால் இவரும் பாடகியாக வர வேண்டும் என்றே முதலில் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிரியாணி படத்தில் மட்டும் சில வரிகள் பாடியிருந்தார். தொடந்து பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆர்ஜேவாக சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு ஆதித்யா டிவியில் சில காலங்கள் வீஜேவாக இருந்த அவர், அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், நிறத்தின் காரணமாக சினிமாவிலும் நிராகரிக்கப்பட்ட விலாசினிக்கு விஜய் டிவி தான் கடைசியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு அளித்தது. விலாசினி தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
கேரியர் என்பதை தாண்டி, சொந்த வாழ்க்கையிலும் கணவரின் கொடுமையால் துன்பத்திற்கு ஆளான விலாசினி, அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது நடிப்பிலும் ரசிகர்களை மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் தங்கள் அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கும் விலாசினி புதிய போட்டோஷூட்டுகள் மூலம் சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறார்.