தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள விலாசினி, ஆர்ஜே, டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பன்முக திறமை கொண்டவர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர் தான் இந்த விலாசினி. இசைகுடும்பத்தில் பிறந்ததால் இவரும் பாடகியாக வர வேண்டும் என்றே முதலில் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிரியாணி படத்தில் மட்டும் சில வரிகள் பாடியிருந்தார். தொடந்து பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆர்ஜேவாக சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு ஆதித்யா டிவியில் சில காலங்கள் வீஜேவாக இருந்த அவர், அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், நிறத்தின் காரணமாக சினிமாவிலும் நிராகரிக்கப்பட்ட விலாசினிக்கு விஜய் டிவி தான் கடைசியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு அளித்தது. விலாசினி தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
கேரியர் என்பதை தாண்டி, சொந்த வாழ்க்கையிலும் கணவரின் கொடுமையால் துன்பத்திற்கு ஆளான விலாசினி, அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது நடிப்பிலும் ரசிகர்களை மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் தங்கள் அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கும் விலாசினி புதிய போட்டோஷூட்டுகள் மூலம் சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறார்.