பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நுழைந்தவர் அமீர். அவரை பற்றி பலருக்கும் தெரியாது. பிரபல நடன இயக்குநரான அமீர் சமீபத்தில் நடைபெற்ற பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு பிக்பாஸ் கதவுகள் திறக்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் வீட்டில் காதல் சிறகடித்து பறந்து வரும் அமீர் பற்றி பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். அவரை பற்றி சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
அமீர் தனது 16 வயதிற்குள்ளாகவே தாய் - தந்தையரை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை அஷ்ரப் என்பவர் தான் பொறுப்புடன் வளர்த்தார். சிறுவயதில் ஆர்மியில் சேர வேண்டும் என விருப்பம் கொண்ட அமீர் அதற்காக எவ்வளவோ முயற்சி செய்து பாதுகாப்புத் துறைக்கு படித்தார். ஆனால், அவரால் ஆர்மியில் தேர்வு பெற முடியவில்லை. நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாகத்தான் தேசியக் கொடியை அவரது கைகளில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
ஆர்மியை தவிர டான்ஸிலும் அதிக ஈடுபாடு கொண்ட அமீர், பிரபுதேவாவின் தீவிர ரசிகர். அதன்பின் நடனம் கற்றுக்கொண்ட அமீர் இன்று ஏடிஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக்குழுவை ஆரம்பித்துள்ளார். அந்த குழு இந்திய அளவில் பல நடன போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
பிக்பாஸில் அமீர் செய்யும் சேட்டைகள் சிலரை கடுப்பேற்றியும் சிலரை கவர்ந்தும் வருகிறது. ஆனால், அவருடைய வாழ்க்கை கதை பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.




