இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகை பரீனா ஆசாத் தான் சீக்கிரம் பழைய வெண்பாவாக வந்துவிடுவேன் என ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பரீனா ஆசாத். நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோதும் ஷூட்டிங்கில் எனர்ஜிட்டிக்காக கலந்து கொண்டு திறமையை நிரூபித்தார். இந்நிலையில் பரீனாவுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவத்தின் காரணமாக வெண்பா சீரியலில் தொடர்ந்து நடிக்கமாட்டார் என பலரும் கருதிவந்தனர்.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபரீனா ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துள்ளார். பரீனா ஆசாத்துக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ள நிலையில் மருத்துவமனையில் தான் இப்போது இருந்து வருகிறார். மருத்துவமனை பெட்டில் படுத்தவாறு செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'நானும் எனது மகனும் நலமுடன் இருக்கிறோம். சுகப்பிரசவம் தான். விரைவில் திரும்புவேன்' என கூறியுள்ளார். இதன் காரணமாக பரீனா மிக விரைவில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.