அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகை பரீனா ஆசாத் தான் சீக்கிரம் பழைய வெண்பாவாக வந்துவிடுவேன் என ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பரீனா ஆசாத். நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோதும் ஷூட்டிங்கில் எனர்ஜிட்டிக்காக கலந்து கொண்டு திறமையை நிரூபித்தார். இந்நிலையில் பரீனாவுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவத்தின் காரணமாக வெண்பா சீரியலில் தொடர்ந்து நடிக்கமாட்டார் என பலரும் கருதிவந்தனர்.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபரீனா ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துள்ளார். பரீனா ஆசாத்துக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ள நிலையில் மருத்துவமனையில் தான் இப்போது இருந்து வருகிறார். மருத்துவமனை பெட்டில் படுத்தவாறு செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'நானும் எனது மகனும் நலமுடன் இருக்கிறோம். சுகப்பிரசவம் தான். விரைவில் திரும்புவேன்' என கூறியுள்ளார். இதன் காரணமாக பரீனா மிக விரைவில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.