மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
காற்றுக்கென்ன வேலி சீரியலில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒருபுறம் சைலன்ட்டாக ஹிட் அடித்து வருகிறது. ஆனால், அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திர நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அந்த தொடரின் சாரதா கதாபாத்திரத்தில் ஜோதி ராயும், நாயகன் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமனும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தொடரின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வீணா வெங்கடேஷ் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல நடிகை சுஜாதா பஞ்சு மீனாட்சியாக நடித்து வருகிறார். இப்படி இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களின் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால் சீரியல் முடிவை நோக்கி செல்கிறதா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.