தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் |
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத், செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி, இயக்குநர் சங்க துணை தலைவர் பேரரசு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, எஸ்.வி.சேகர், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், எம்ஜிஆர் பல்கலைகழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.