நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஜோதிகாவின் 50வது படமாக ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.,14ல் ஓடிடியில் வெளிவருகிறது ‛உடன்பிறப்பே' படம். கிராமத்து கதையில் அண்ணன் - தங்கை உறவை மையமாக வைத்து இந்தபடம் உருவாகி உள்ளது. அண்ணனனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தயாரித்துள்ளார்.
ஜூம் மீட்டிங் வாயிலாக ஜோதிகா அளித்த பேட்டி : இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக என் மாமியார் உள்ளிட்ட என் கணவரின் குடும்பத்தினரை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன். நிறைய ஆய்வு செய்து, பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் அதற்கு உதவியாக இருந்தது என்றார்.
ஓடிடி வெளியீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛எனது 50வது படம் தியேட்டர்களில் வெளியிடாதது வருத்தம் தான். இருப்பினும் இது முன்பே திட்டமிடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் தியேட்டர்கள் எப்போது திறக்கும், சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் தான் ஓடிடி முடிவை எடுத்தோம்'' என்றார்.
சூர்யாவுடன் மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛நல்ல கதைக்காக இருவருமே காத்திருக்கிறோம். அமைந்தால் நிச்சயம் மீண்டும் இணைந்து நடிப்போம்'' என்றார்.