பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள் | திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'கீனோ' | பிளாஷ்பேக் : தியாகராஜ பாகவதரை காப்பாற்ற முயன்ற திரையுலகம் | முழுக்க முழுக்க 'ஏஐ' மூலம் உருவான இந்தியாவின் முதல் படம்: பட்ஜெட் 10 லட்சம் தானாம்! | பிரியா பிரகாஷ் வாரியரை டென்ஷனாக்கிய விஜய்யின் பாராட்டு வீடியோ | நான் பாகிஸ்தானி அல்ல ; கொதிக்கும் பிரபாஸ் பட நாயகி | அட்லியைப் புறக்கணித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள்? | சம்பளத்தை குறைத்ததால் விலகிக் கொண்டேன் ; ஜூனியர் என்டிஆரின் டூப் நடிகர் அதிர்ச்சி தகவல் | ஓடிடியில் விற்பனை ஆகாத மத கஜ ராஜா | வீர தீர சூரன் ஓடிடி-யில் வரவேற்பு எப்படி? |
ஜோதிகாவின் 50வது படமாக ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.,14ல் ஓடிடியில் வெளிவருகிறது ‛உடன்பிறப்பே' படம். கிராமத்து கதையில் அண்ணன் - தங்கை உறவை மையமாக வைத்து இந்தபடம் உருவாகி உள்ளது. அண்ணனனாக சசிகுமாரும், தங்கையாக ஜோதிகாவும், இவரின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தயாரித்துள்ளார்.
ஜூம் மீட்டிங் வாயிலாக ஜோதிகா அளித்த பேட்டி : இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக என் மாமியார் உள்ளிட்ட என் கணவரின் குடும்பத்தினரை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன். நிறைய ஆய்வு செய்து, பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் அதற்கு உதவியாக இருந்தது என்றார்.
ஓடிடி வெளியீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛எனது 50வது படம் தியேட்டர்களில் வெளியிடாதது வருத்தம் தான். இருப்பினும் இது முன்பே திட்டமிடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் தியேட்டர்கள் எப்போது திறக்கும், சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் தான் ஓடிடி முடிவை எடுத்தோம்'' என்றார்.
சூர்யாவுடன் மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ‛‛நல்ல கதைக்காக இருவருமே காத்திருக்கிறோம். அமைந்தால் நிச்சயம் மீண்டும் இணைந்து நடிப்போம்'' என்றார்.