தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிராமிய பாடல்களால் மக்களை மகிழ்வித்து வந்த செந்தில் - ராஜலட்சுமி தம்பதியினரை ஊடக வெளிச்சத்தால் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது விஜய் டிவி. சூப்பர் சிங்கர் ஆறாவது சீசனில் கணவன் மனைவியாக செந்திலும் ராஜலட்சுமியும் போட்டியில் நுழைந்தனர். அதுவரை வெகுஜன ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத அவர்களது நாட்டுப்புற மக்களிசை பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியை கச்சிதமாக செய்தது விஜய் டிவி. அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்கள், சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு, விளம்பர படங்கள் என அடுத்தடுத்த வளர்ச்சி பாதையை நோக்கி சென்றனர் தம்பதிகள் இருவரும். அதிலும் செந்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி படம் ஒன்றிலும் நடித்து விட்டார்.
இந்நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக செந்தில் - ராஜலட்சுமி இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வருகின்றனர். இதயத்தை திருடாதே சூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் செந்தில் ராஜலட்சுமி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதனை வியப்புடன் பார்க்கும் ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமி தங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.