வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் | ‛ஜனநாயகன்' அப்டேட் என்ன...? எப்பதான் படம் ரிலீஸ்? | இன்னும் ஆறு நாட்களில் 'பெத்தி' படப்பிடிப்பு முடியும் ; இயக்குனர் உறுதி | நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்தி |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த சனியன்று வெளியான திரைப்படம்'டாக்டர்'. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
நேற்று முன் தினம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றூள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரோனா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.