ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நான்கு வருட திருமண பந்தம் முடிவதற்குள்ளாகவே தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்களது பிரிவு குறித்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இவர்களே தற்போது அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் இவர்கள் அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில் சமந்தாவின் நெருங்கிய தோழியான பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு மட்டும் போதாது என்கிற தலைப்பில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக உங்கள் வருமானம், வரவு-செலவு, மதம், குழந்தைகளை வளர்க்கும் ஸ்டைல், குடும்பத்துடன் எப்படி இணைந்து பயணிப்பீர்கள், குழந்தைகள் மீது எந்த விதமான நம்பிக்கைகளை புகுத்துவீர்கள், உங்களது சிறுவயது அபிலாஷைகள், செக்ஸ் எதிர்பார்ப்புகள், துணை குறித்த எதிர்பார்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், குடும்பத்தினருடைய ஆரோக்கிய விபரம், அவர்களது மன நலம் குறித்த விபரம், அங்கே செய்யவேண்டிய கடமைகள், சொந்த வீட்டுக்கனவு, வேலை, படிப்பு, அரசியல் பார்வைகள் மற்றும் மனதில் என்ன தோன்றுகிறதோ அவையெல்லாம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பு மட்டுமே போதாது.." என்று கூறியுள்ளார்.
சமந்தாவின் காதல் திருமணம் இப்படி நான்கு வருடங்களிலேயே முடிவடைந்துள்ளது என்பதாலேயே, காதல் திருமணம் குறித்து இப்படி ஒரு பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.