இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா-நாகசைதன்யா நட்சத்திர தம்பதியினர் நேற்று தாங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கூட்டாக அறிவித்தனர். இந்த செய்தி தமிழ், தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பிரிவிற்கான காரணத்தை அவர்கள் இருவருமே தெரிவிக்கவில்லை. அதோடு கடந்த மூன்று மாதங்களாகவே நாகசைதன்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா, தொடர்ந்து சினிமாவில் தான் கவனம் செலுத்தும் நோக்கில் சினிமா, வெப் சீரிஸ் என்று நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார். அதோடு, நாகசைதன்யாவை பிரிவது என்பது பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நேற்று இந்த செய்தியை வெளியிட்டது சமந்தாவிற்கு பெரிதாக மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய தயாராகிவிட்ட சமந்தாவிற்கு அவரது சார்பில் ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும் அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு நான் சினிமாவில் தனித்து வந்து போராடி வெற்றி பெற்றவள். அதனால் என்னால் சுயமாக சம்பாதித்து வாழ முடியும் என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.