புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? |

சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் செல்வராகவன் அதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன்பிறகு தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட்டரில் தற்போது வெளியிடுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‛‛இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப்போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி'' என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவில் தனியாக இருப்பதே நிம்மதி என்று பதிவிட்டிருப்பதால் ஒருவேளை குடும்ப வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டதின் விளைவாகத்தான் இப்படியொரு பதிவு போட்டுள்ளாரோ? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.