20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் செல்வராகவன் அதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன்பிறகு தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட்டரில் தற்போது வெளியிடுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‛‛இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப்போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி'' என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவில் தனியாக இருப்பதே நிம்மதி என்று பதிவிட்டிருப்பதால் ஒருவேளை குடும்ப வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டதின் விளைவாகத்தான் இப்படியொரு பதிவு போட்டுள்ளாரோ? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.