மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
இந்தியத் திரையுலகில் பல்லாயிரம் ஹிட் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் மரணம் அடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாளை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அனுசரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி பாடல்கள் பலவும் காலை முதல் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் எஸ்பிபி நினைவு தினத்தை அனுசரித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“நம் மனதில் என்றென்றும் எப்போதும் ஈடு இணையற்ற அவரது தெய்வீகக் குரலால் நிறைந்திருப்பார். எஸ்பிபி சாரை அவரது முதல் நினைவு தினத்தில் நினைவு கூறுகிறேன்,” என்று மோகன்லால் டுவீட் செய்துள்ளார்.
மம்முட்டி, “லெஜன்ட் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டது. அவரது பெரு மகிழ்ச்சியூட்டுகிற குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன்,” என்று டுவீட் செய்துள்ளார்.