தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை |
இந்தியத் திரையுலகில் பல்லாயிரம் ஹிட் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் மரணம் அடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாளை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அனுசரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி பாடல்கள் பலவும் காலை முதல் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் எஸ்பிபி நினைவு தினத்தை அனுசரித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“நம் மனதில் என்றென்றும் எப்போதும் ஈடு இணையற்ற அவரது தெய்வீகக் குரலால் நிறைந்திருப்பார். எஸ்பிபி சாரை அவரது முதல் நினைவு தினத்தில் நினைவு கூறுகிறேன்,” என்று மோகன்லால் டுவீட் செய்துள்ளார்.
மம்முட்டி, “லெஜன்ட் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டது. அவரது பெரு மகிழ்ச்சியூட்டுகிற குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன்,” என்று டுவீட் செய்துள்ளார்.