என்னாச்சு கேர்ள் பிரண்டுக்கு? : ரசிகர்களை அமைதிப்படுத்திய ராஷ்மிகா | கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை | ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் பட ரீ ரிலீஸில் அதிர்ச்சி : பாதியில் வெளியேறிய ரசிகர்கள் | மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி | தொடரும் பட இயக்குனரை வீட்டுக்கே வரவழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி | 'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் |
மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என சொல்லப்பட்ட 'தலைவி' படம் இந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் அங்கு படம் வெளியாகவில்லை. அந்த மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகளில் வெளியானது.
ஹிந்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு வாரங்களில் ஓடிடி வெளியீடு என்று சொல்லப்பட்டதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் பலவும் படத்தை வெளியிடவில்லை. இதன் காரணமாக படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மூன்று மொழிகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக இப்படத்தின் வசூல் 20 கோடி தாண்டினாலே அதிகம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படத்தை 100 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஓடிடி வெளியீடு, சாட்டிலைட் உரிமை என ஆகியவற்றின் மூலம்தான் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும். தியேட்டர் வசூல் பெரிய அளவில் வந்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும். தற்போது முதலுக்கு மோசம் இல்லாத நிலையில்தான் இப்படம் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பதை தயாரிப்பாளர்தான் தெரிவிக்க வேண்டும்.
ஹிந்தியில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்று சொல்லப்பட்டது. இன்று முதல் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து தமிழ், தெலுங்கு படங்களும் ஓடிடியில் வெளியாகும்.