ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என சொல்லப்பட்ட 'தலைவி' படம் இந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் அங்கு படம் வெளியாகவில்லை. அந்த மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகளில் வெளியானது.
ஹிந்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு வாரங்களில் ஓடிடி வெளியீடு என்று சொல்லப்பட்டதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் பலவும் படத்தை வெளியிடவில்லை. இதன் காரணமாக படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மூன்று மொழிகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக இப்படத்தின் வசூல் 20 கோடி தாண்டினாலே அதிகம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படத்தை 100 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஓடிடி வெளியீடு, சாட்டிலைட் உரிமை என ஆகியவற்றின் மூலம்தான் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும். தியேட்டர் வசூல் பெரிய அளவில் வந்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும். தற்போது முதலுக்கு மோசம் இல்லாத நிலையில்தான் இப்படம் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பதை தயாரிப்பாளர்தான் தெரிவிக்க வேண்டும்.
ஹிந்தியில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்று சொல்லப்பட்டது. இன்று முதல் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து தமிழ், தெலுங்கு படங்களும் ஓடிடியில் வெளியாகும்.