ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

இந்திய சினிமாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடும் நிலாவான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த நிலையில் நோய்க்கு பிந்தைய பாதிப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைந்து இன்றோடு ஓராண்டாகிவிட்ட நிலையில் திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால் தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.




