ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் ‛ஒஸ்தி' உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வில்லனாக இவர் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு வந்த சமயத்தில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் செய்யாத காரியத்தை சோனு சூட் முன்னெடுத்து மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக திகழ்கிறார்.
கொரோனா சமயத்தில் வெளிமாநிலங்களில் தவித்த பல தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில், பஸ், விமானம் என அனுப்பி வைத்தவர் தொடர்ந்து இப்போது வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதனாலேயே இப்போதும் சோனு சூட்டிடம் உதவிக் கேட்டு பலர் அவரது வீட்டு வாசலை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சோனு சூட்டிற்கு சொந்தமான நிறுவனம் மற்றும் லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருவமான வரிசோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.