விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் ‛ஒஸ்தி' உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வில்லனாக இவர் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு வந்த சமயத்தில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் செய்யாத காரியத்தை சோனு சூட் முன்னெடுத்து மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக திகழ்கிறார்.
கொரோனா சமயத்தில் வெளிமாநிலங்களில் தவித்த பல தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில், பஸ், விமானம் என அனுப்பி வைத்தவர் தொடர்ந்து இப்போது வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதனாலேயே இப்போதும் சோனு சூட்டிடம் உதவிக் கேட்டு பலர் அவரது வீட்டு வாசலை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சோனு சூட்டிற்கு சொந்தமான நிறுவனம் மற்றும் லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருவமான வரிசோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.