என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் தலைவி படத்தை அடுத்து சீதா படத்தில் சீதாவாக நடிக்க உள்ளார். அலாகிக் தேசாய் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். உடன் படத்தின் இயக்குனர் அலாகிக்கும் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் முதலில் சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பானது. இப்போது கங்கனா நடிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
மணிகர்ணிகா, தலைவி படங்களுக்குப் பிறகு ஒரு பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் கங்கனா. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.