டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
80, 90களின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கார்த்திக். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு அன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக் தான். கார்த்திக் அவருடன் 'சோலைக்குயில்' படத்தில் கதாநாயகியாக நடித்த ராகினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கவுதம், காயின் என இரு மகன்கள் உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கவுதம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது 'பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் தன்னுடைய 32வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா ராகினி, தம்பி காயின் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் கவுதம்.
தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை கார்த்திக் அதிகமாக வெளியிட்டதில்லை. கவுதம் புகைப்படங்கள் கூட அவர் நடிகரான பிறகுதான் வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதம் தனது அம்மா, தம்பி ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.