சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தபட அறிவிப்பு வெளியான சமயத்தில் ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யாவும் ‛பொன்னியின் செல்வன்' நாவலை அதேபெயரில் வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு இந்த வெப்சீரிஸ் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் ‛புது வெள்ளம்' என்ற பெயரில் பொன்னியின் செல்வன் முதல் சீசன் துவங்க உள்ளதாக சவுந்தர்யா அறிவித்து தனது குழு உடன் இருக்கும் போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது.