'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தபட அறிவிப்பு வெளியான சமயத்தில் ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யாவும் ‛பொன்னியின் செல்வன்' நாவலை அதேபெயரில் வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு இந்த வெப்சீரிஸ் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் ‛புது வெள்ளம்' என்ற பெயரில் பொன்னியின் செல்வன் முதல் சீசன் துவங்க உள்ளதாக சவுந்தர்யா அறிவித்து தனது குழு உடன் இருக்கும் போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது.