டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தி படம் பார்க்காதவர்களுக்கு கூட அதிரடியான பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் நன்கு தெரிந்த முகம் ஆகிவிட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் நடித்துள்ள தலைவி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக இன்று(செப்., 10) வெளியாகி உள்ளது. அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மும்பை, ஐதராபாத், சென்னை என மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார் கங்கனா.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, தனக்கு தெலுங்கில் மீண்டும் நடிப்பதற்கு ஆசையாக இருப்பதாகவும், அதுவும் பிரபாஸுக்கு ஜோடியாக பூரி ஜெகந்நாத் டைரக்சனிலேயே மீண்டும் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பூரி ஜெகந்நாத் டைரக்ஷனில் ஏக் நிரஞ்சன் என்கிற படத்தில் பிரபாஸ் ஜோடியாக கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.