இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் இந்தியிலும் பான் இந்தியா படமாகத்தான் உருவாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் திரைக்கதை மற்றும் தமிழில் வசனம் எழுதும் கூட்டணியில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாடி ராசாத்தி, அடியே அழகே என மென்மையான பாடல்களை எழுதிய விவேக் அதன் பிறகு ரஜினிக்கு மரண மாஸ், விஜய்க்கு சிம்டாங்காரன் என அதிரடியான பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தநிலையில், திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் எழுதுவது என தனது எல்லையை விரிவுபடுத்தி உள்ளார் விவேக். அது இயக்குனர் ஷங்கர் படத்தின் மூலமாக நிறைவேறி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள விவேக், இந்த படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது என கூறியுள்ளார்.