18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
பாலிவுட் சினிமாவில் இருந்து மனீஷா கொய்ராலா, தீபிகா படுகோனே, வித்யாபாலன் என பல நடிகைகள் தமிழுக்கு வந்து நடித்துள்ள நிலையில், தற்போது காலாவைத் தொடர்ந்து வலிமையில் நடித்துள்ளார் ஹூமாகுரோசி. அவரைத் தொடர்ந்து தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சென்னை, ஐதராபாத், மும்பை என இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கங்கனாரணாவத்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று கூறியுள்ள கங்கனா, தமிழில் இப்படம் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதோடு, அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களான ரஜினி, விஜய் ஆகியோருடனும் இணைந்து நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.