தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி உள்பட பலர் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. வருகிற செப்டம்பர் 10-ந்தேதி இப்படம் வெளி யாகிறது.
அதனால் தற்போது மூன்று மொழிகளிலும் தலைவி படத்தை பிரமோசன் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளார் கங்கனா ரணாவத். நேற்று முன்தினம் இப்படத்தின் பிரமோசனுக்காக சென்னை வந்த அவர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இங்கு நடந்த பிரஸ்மீட்டில் பங்கேற்றார்.
அதையடுத்து நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கனா, எனக்கு இந்த ரோலை கொடுத்ததற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நம்பியதற்கு அவருக்கு எனது நன்றி. ஒரு பெண்ணை மையப்படுத்திய படத்தில் நடித்த அரவிந்த்சாமி பெருந்தன்மையானவர் என்று கூறியுள்ள கங்கனா, நான் பணியாற்றியதில் மிகவும் திறமையான இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றும் தெரிவித்துள்ளார்.