மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே தனது தம்பி கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்ற வெற்றி படத்தை தயாரித்தார். இப்போது மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இதை கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும் கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரணும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.
இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. படத்திற்கு “விருமன்” என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். 'மாநகரம்' மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். இப்படத்தின் பூஜை திங்கள்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பு துவங்குகிறது.




