22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் |
மலையாள திரையுலகில் இருபது வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் தான் மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், மற்றும் சம்யுக்தா வர்மா. இதில் கீது மோகன்தாஸ் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும், அப்படியே இயக்குனராக மாறிவிட்டார். நடிகை சம்யுக்தா வர்மாவும் நடிகர் பிஜுமேனனை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
மஞ்சுவாரியார் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்கள் மூவரும் அவ்வப்போது ஒன்று கூடி அரட்டை அடிக்கவும் தங்களைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்து கொள்ளவும் தவறுவதில்லை
அப்படி சமீபத்தில் சம்யுக்தா மேனன், கீது மோகன்தாஸ் இருவரையும் சந்தித்துள்ளார் மஞ்சுவாரியர். மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சுவாரியர், “எதையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எப்போதும் நண்பர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்