ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
மலையாள நடிகர் பிரித்விராஜும் அவரது அண்ணன் இந்திரஜித்தும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களது தந்தை மறைந்த நடிகரான சுகுமாரனும் பிரபல நடிகராக இருந்தவர் தான். பிரித்விராஜின் அம்மா மல்லிகா முன்னாள் நடிகை என்றாலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கி மகன்களை வளர்த்து ஆளாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது மகன்கள் பெரிய நடிகர்களாக மாறிவிட, தனது கணவரும் மறைந்துவிட்ட நிலையில் மீண்டும் குணச்சித்திர நடிகையாக அரிதாரம் பூசி நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது மகன் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து இயக்கி வரும் “ப்ரோ டாடி” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மல்லிகா சுகுமாரன்.
மிகச்சிறந்த நடிகரையும் என்னுடைய மதிப்பிற்குரிய அம்மாவையும் ஒரே பிரேமில் இயக்கியது மாபெரும் தருணம் என இதுகுறித்து தனது இரட்டிப்பு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.