ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடக்கின்றன. இப்படத்தை வருகிற அக்டோபர் 13-ந்தேதி வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராஜமவுலி. ஆனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த ஆண்டு எப்போது ரிலீஸ் என்பதை இன்னும் ராஜமவுலி உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் இப்படி ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை ராஜமவுலி உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படம் வெறும் ரூ.25 கோடி தான் வசூலித்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்க முன்வரும் வட இந்திய விநியோகஸ்தர்கள் குறைவான தொகைக்கே படத்தை கேட்பார்கள் என்பதால், அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெறும் போது படத்தை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கலாம் என்று தான் தாமதம் செய்து வருகிறாராம் ராஜமவுலி.