ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடக்கின்றன. இப்படத்தை வருகிற அக்டோபர் 13-ந்தேதி வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராஜமவுலி. ஆனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த ஆண்டு எப்போது ரிலீஸ் என்பதை இன்னும் ராஜமவுலி உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் இப்படி ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை ராஜமவுலி உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படம் வெறும் ரூ.25 கோடி தான் வசூலித்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்க முன்வரும் வட இந்திய விநியோகஸ்தர்கள் குறைவான தொகைக்கே படத்தை கேட்பார்கள் என்பதால், அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெறும் போது படத்தை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கலாம் என்று தான் தாமதம் செய்து வருகிறாராம் ராஜமவுலி.