சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடக்கின்றன. இப்படத்தை வருகிற அக்டோபர் 13-ந்தேதி வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராஜமவுலி. ஆனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த ஆண்டு எப்போது ரிலீஸ் என்பதை இன்னும் ராஜமவுலி உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் இப்படி ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை ராஜமவுலி உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படம் வெறும் ரூ.25 கோடி தான் வசூலித்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்க முன்வரும் வட இந்திய விநியோகஸ்தர்கள் குறைவான தொகைக்கே படத்தை கேட்பார்கள் என்பதால், அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெறும் போது படத்தை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கலாம் என்று தான் தாமதம் செய்து வருகிறாராம் ராஜமவுலி.