'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கதைக்கு தேவை என்றால் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் இருக்கும் நடிகர்களுடனும் நடிக்கத் தயங்க மாட்டார். இது கதிர்வேலன் காதலில் உதயநிதி, மாயாவில் ஆரி, டோராவில் ஹரிஷ் உத்தமன், திருநாளில் ஜீவா, ஐராவில் கலையரசன் இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து நயன்தாராவுடன் நடிப்பவர் விதார்த்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. இதில் எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கும் படமும் ஒன்று. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது. இதில் விதார்த் மற்றும் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீ நடித்து வருகிறார்கள். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அந்த படத்திற்கு பிறகு இதில் நடிக்கிறார். இதில் நயன்தாராவுக்கு உதவும் நண்பர்களாக விதார்த்தும், ஸ்ரீயும் நடிப்பதாக கூறப்படுகிறது.




