கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கதைக்கு தேவை என்றால் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் இருக்கும் நடிகர்களுடனும் நடிக்கத் தயங்க மாட்டார். இது கதிர்வேலன் காதலில் உதயநிதி, மாயாவில் ஆரி, டோராவில் ஹரிஷ் உத்தமன், திருநாளில் ஜீவா, ஐராவில் கலையரசன் இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து நயன்தாராவுடன் நடிப்பவர் விதார்த்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. இதில் எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கும் படமும் ஒன்று. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது. இதில் விதார்த் மற்றும் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீ நடித்து வருகிறார்கள். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அந்த படத்திற்கு பிறகு இதில் நடிக்கிறார். இதில் நயன்தாராவுக்கு உதவும் நண்பர்களாக விதார்த்தும், ஸ்ரீயும் நடிப்பதாக கூறப்படுகிறது.