கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் |
விஷால் நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அங்குள்ள முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு உணவளித்து, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்திருக்கிறேன். பிறந்த நாளன்று நிறைய நல்ல விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடிக்கிறேன். தயவுசெய்து போஸ்டர்கள், கட்-அவுட்கள் வைக்காதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வடிவேலு மீண்டும் நடிக்க வருவதில் எனக்கு மகிழ்ச்சி. தமிழ் திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஜிஎஸ்டி வரி, உள்ளாட்சி வரி இரண்டையும் கட்டும் ஒரே மாநிலம் தமிழகம். அதை மாற்றினால் நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர்கள் படத்தை உருவாக்கிவிட்டு, திரையரங்குகளா? ஓடிடி தளங்களா என்று திண்டாடுகின்றனர். இனி திமுக ஆட்சியில் திரையுலகிற்கு நல்லது நடக்கும். . கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்கள் விரைவில் திரையரங்குகளுக்கு திரும்புவார்கள்.
வழக்கு நடந்து கொண்டிருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் சங்கத்திற்கு யாருக்கும் உதவி செய்ய முடியவில்லை. இந்த நிலை மாறும்.
இவ்வாறு விஷால் கூறினார்.