பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சுராஜின் கத்திச்சண்டையில் மறுபடியும் காமெடி வேடத்துக்கு திரும்பினார் வடிவேலு. ஆனால், அதையடுத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெட் கார்டு போடப்பட்டு, வடிவேலு படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடையை விலக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கும் வடிவேலு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம் தான். அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடித்த பின் காமெடி வேடங்களுக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்று வடிவேலுவுக்கு வாழ்த்து சொல்ல போனில் தொடர்பு கொண்ட போது அவரிடம் 'அரசியலுக்கு முன்ன மாதிரி வருவீங்களா ' என்று கேட்கப்பட்டதற்கு கொஞ்சம் கோபமான வடிவேலு, பேசிட்டு இருக்கும் போது, உள்ள குச்சிய விடக்கூடாது, தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.