இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது. படத்தின் பட்ஜெட்டை ஷங்கர் அதிகமாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டுடன் அவர் மீது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கப் போகக் கூடாது என லைக்கா நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அது தற்போது நடந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பானுமதியை நீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே, சமீபத்தில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் சென்னை வந்துள்ளார். அவரை இயக்குனர் ஷங்கர் நேரில் சென்று சந்தித்துள்ளார். நடந்த விவகாரங்களைப் பற்றி இருவரும் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே சுமூக உடன்பாடும் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, விரைவில் ஷங்கர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் கூட இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டே ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை இயக்கி முடிப்பார் என்றும், கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு முடிந்ததும் அவரும் வந்து இப்படத்தில் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது.