ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகின் முக்கியமான திரைக்குடும்பமான அக்கினேனி குடும்பத்தில் மருமகளாகச் சென்றவர் சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா. நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. நாகார்ஜுனாவுக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா. பின்னர் முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு நடிகை அமலாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகார்ஜுனா.
அதனால், தனது மகன் நாக சைதன்யா கிறிஸ்துவப் பெண்ணான சமந்தாவைக் காதலித்ததற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கோவாவில் மூன்று வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணமும் நடைபெற்றது. இதனிடையே, சமீபத்தில் சமந்தா அவரது சமூக வலைத்தளங்களில் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கியிருந்தார். அதிலிருந்தே அவருக்கும் நாக சைதன்யாவுக்கும் பிரச்னை, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி அதிகமாகப் பரவியது.
அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாமனார் நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மருமகள் சமந்தா. “உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இன்றும், எப்போதும், உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நாகார்ஜுனா மாமா,” என வாழ்த்தியுள்ளார்.