எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
சமீபத்தில் கடந்து சென்ற சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய செல்லப்பிராணிகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விலங்குகளை நேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் நடிகை கனிகா தனது செல்லப்பிராணியான மேகி என்கிற நாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நாய் வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் தயவு செய்து நாய்களை விலைக்கு வாங்கும் பொருளாக கருதாதீர்கள், நாய்களை தத்தெடுத்து அவற்றையும் நம் வீட்டில் உள்ள ஒரு ஜீவனாக பாவித்து அன்பு செலுத்தி வளருங்கள். நம்மீது நம்பிக்கை வைத்து அளவில்லா அன்பை திருப்பி செலுத்தும் அந்தப் பிராணி கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறியுள்ள கனிகா நாய்களை எங்கே தத்தெடுக்கலாம் என்கிற விபரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.