நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
சமீபத்தில் கடந்து சென்ற சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய செல்லப்பிராணிகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விலங்குகளை நேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் நடிகை கனிகா தனது செல்லப்பிராணியான மேகி என்கிற நாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நாய் வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் தயவு செய்து நாய்களை விலைக்கு வாங்கும் பொருளாக கருதாதீர்கள், நாய்களை தத்தெடுத்து அவற்றையும் நம் வீட்டில் உள்ள ஒரு ஜீவனாக பாவித்து அன்பு செலுத்தி வளருங்கள். நம்மீது நம்பிக்கை வைத்து அளவில்லா அன்பை திருப்பி செலுத்தும் அந்தப் பிராணி கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறியுள்ள கனிகா நாய்களை எங்கே தத்தெடுக்கலாம் என்கிற விபரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.