கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு |
நடிகை ராதிகா சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான கிழக்கே போகும் ரெயில் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் தேனி பகுதியை சுற்றி நடந்தது. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பழனியை சுற்றி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு ராதிகா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பின் இடைவெளியில் ராதிகா பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பான படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர். "பழனி முருகன் கோவிலுக்கு வருவது எப்போதுமே எனக்கு சிறப்பானது. பாசிட்டிவான உணர்வுகளை இங்கு நான் பெறுவேன். இந்த முறை கோவிலுக்கு சென்றபோது எனது பழைய நினைவுகள் மனதில் ஓடியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.