ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மெய்க்காப்பாளரான ஜிதேந்திர ஷிண்டே என்பவர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதோடு 5 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரபலத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட நபர் பாடிகார்டாக இருக்கக்கூடாது என்கிற விதி இருந்தபோதும், இந்த ஜிதேந்திர ஷிண்டே அமிதாப்பச்சனிடம் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் ஜிதேந்திர ஷிண்டே, வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாயை அமிதாப்பச்சனிடம சம்பாதித்தாரா? இல்லை வேறு வழியில் சம்பாதித்தாரா? என்று அவரிடத்தில் மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. இந்தவிசாரணையில், தனது மனைவி ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த ஒன்றரை கோடி வருமானம் கிடைத்து வருவதாகவும் விசாரணையில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விசாரணைக்குப்பிறகு அமிதாப்பச்சனிடம் கடந்த 6 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்து வந்த ஜிதேந்திர ஷிண்டே மும்பை தெற்கு காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.