ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சீரியல்களில் நடித்து வந்தவர் தான் பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத். அதன்பின் பஞ்சாபி படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக அதை பார்த்து தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது. அந்தப்படம் ஹிட்டாகவே, தெலுங்கு ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார் பாயல் ராஜ்புத். இந்த நிலையில் தற்போது அவர் மீது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநிலம் எடாப்பள்ளி நகரத்திலுள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பாயல் ராஜ்புத். அப்போது அவர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அவரைக் காண்பதற்காக அங்கே மிகப் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் முண்டியடித்ததால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்ததன் பேரில் தற்போது கடை நிர்வாகத்தின் மீதும் பாயல் ராஜ்புத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.