வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் அருகில் உள்ள 'உர்ச்சா' என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் செல்லும் போது இயக்குனர் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'உர்ச்சா' படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை நேற்று பிரகாஷ்ராஜ் கொடுத்திருந்தார்.
இன்றைய அப்டேட்டாக குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் த்ரிஷா கொடுத்திருக்கிறார். உர்ச்சாவில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெறும் படப்பிடிப்புப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதோடு, அங்கே தெருவோரக் கடைகளிலும் ஷாப்பிங் சென்றிருப்பார் போலிருக்கிறது. அந்த வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடைசிக் கட்டப் படப்பிடிப்பை 'பொன்னியின் செல்வன்' படக்குழு விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.




