பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தெலுங்குத் திரையுலகில் தனி ஸ்டார் அந்தஸ்துடன் இருப்பவர் சிரஞ்சீவி. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதில் களமிறங்கி தெலுங்கு சினிமாவுக்காக தற்போது பல விஷயங்களையும் முன்னெடுத்துச் சென்று வருகிறார்.
தனிக்கட்சி ஆரம்பித்து பின்னர் அதை காங்கிரசுடன் இணைத்து, மத்திய மந்திரியாகவும் பணியாற்றி, அரசியலே வேண்டாமென ஒதுங்கி, தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இரண்டு புதிய படங்களை ஆரம்பிக்க உள்ளார். நேற்று கூட தெலுங்குத் திரையுலகத்தின் நலனுக்காக பல தெலுங்கு சினிமா பிரமுகர்கள் சிரஞ்சீவி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர்.
தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி தீவிர ஆதரவு தருகிறார் என அங்கு சில சர்ச்சை எழுந்தது. கன்னட நடிகரான பிரகாஷ் ராஜை அவர் ஆதரிப்பது தவறு என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, இன்று பிரகாஷ் ராஜ் ஜிம்மில் சிரஞ்சீவியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “பாஸ்-ஐ அதிகாலையில் ஜிம்மில் சந்தித்தேன். திரையுலக ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா (அண்ணன்), அவரைப் பெற்றதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்,” என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்காகவே இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார் என்ற குரல்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.