டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்குத் திரையுலகில் தனி ஸ்டார் அந்தஸ்துடன் இருப்பவர் சிரஞ்சீவி. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதில் களமிறங்கி தெலுங்கு சினிமாவுக்காக தற்போது பல விஷயங்களையும் முன்னெடுத்துச் சென்று வருகிறார்.
தனிக்கட்சி ஆரம்பித்து பின்னர் அதை காங்கிரசுடன் இணைத்து, மத்திய மந்திரியாகவும் பணியாற்றி, அரசியலே வேண்டாமென ஒதுங்கி, தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இரண்டு புதிய படங்களை ஆரம்பிக்க உள்ளார். நேற்று கூட தெலுங்குத் திரையுலகத்தின் நலனுக்காக பல தெலுங்கு சினிமா பிரமுகர்கள் சிரஞ்சீவி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர்.
தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி தீவிர ஆதரவு தருகிறார் என அங்கு சில சர்ச்சை எழுந்தது. கன்னட நடிகரான பிரகாஷ் ராஜை அவர் ஆதரிப்பது தவறு என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, இன்று பிரகாஷ் ராஜ் ஜிம்மில் சிரஞ்சீவியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “பாஸ்-ஐ அதிகாலையில் ஜிம்மில் சந்தித்தேன். திரையுலக ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா (அண்ணன்), அவரைப் பெற்றதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்,” என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்காகவே இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார் என்ற குரல்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.