என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தெலுங்குத் திரையுலகில் தனி ஸ்டார் அந்தஸ்துடன் இருப்பவர் சிரஞ்சீவி. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதில் களமிறங்கி தெலுங்கு சினிமாவுக்காக தற்போது பல விஷயங்களையும் முன்னெடுத்துச் சென்று வருகிறார்.
தனிக்கட்சி ஆரம்பித்து பின்னர் அதை காங்கிரசுடன் இணைத்து, மத்திய மந்திரியாகவும் பணியாற்றி, அரசியலே வேண்டாமென ஒதுங்கி, தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இரண்டு புதிய படங்களை ஆரம்பிக்க உள்ளார். நேற்று கூட தெலுங்குத் திரையுலகத்தின் நலனுக்காக பல தெலுங்கு சினிமா பிரமுகர்கள் சிரஞ்சீவி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர். 
தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி தீவிர ஆதரவு தருகிறார் என அங்கு சில சர்ச்சை எழுந்தது. கன்னட நடிகரான பிரகாஷ் ராஜை அவர் ஆதரிப்பது தவறு என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, இன்று பிரகாஷ் ராஜ் ஜிம்மில் சிரஞ்சீவியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “பாஸ்-ஐ அதிகாலையில் ஜிம்மில் சந்தித்தேன். திரையுலக ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா (அண்ணன்), அவரைப் பெற்றதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்,” என்று பாராட்டித் தள்ளியுள்ளார். 
விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்காகவே இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார் என்ற குரல்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            